Please Subscribe to Our Whatsapp Channel in the link below<br /><br />https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a<br /><br />Please Visit and Subscribe to our YouTube Channel through the link below<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w<br /><br />உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்கிற ஆசையும் ஏக்கமும் யாருக்குத்தான் இல்லை. வாழ்வில், கஷ்டமான நிலையில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும். கல்வி, உத்தியோகம், அந்தஸ்து,காசு-பணம், வீடு - வாசல் என உயர வேண்டும் என்பதுதானே நம் ஆசை; அதற்குத்தானே இத்தனை போராட்டமும் உழைப்பும்!<br />ஆக, வாழ்வில், உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்கிற நம் எண்ணங்களை ஈடேற்றித் தந்தருள்வார் பிள்ளையாரப்பன்.<br />நம் விக்னங்களையெல்லாம் களைந்து விடுவார் கணபதி. துக்கங்களையும் தீர்த்துத் தருவார் தும்பிக்கையான்.<br />தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு, வாழ்வின் அடுத்தடுத்த வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு என நாம் வேண்டுவதையெல்லாம் கிடைக்கச் செய்வார் ஆனைமுகத்தான்!<br />விநாயக சதுர்த்தி நன்னாளில், அவருக்கு அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கம்பூ மாலையும் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.<br />முக்கியமாக, விவேக சிந்தாமணியில் உள்ள இந்தப் பாடலை மனனம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.<br /><br />விவேக சிந்தாமணியில் உள்ள அந்தப் பாடல் :<br />அல்லல் போம் வல்வினை போம்<br />அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்<br />போகாத் துயரம் போம் - நல்ல<br />குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்<br />கணபதியைக் கைத்தொழுதக் கால்.<br /><br />மலையே சிவமெனத் திகழும் அருணை எனப்படும் திருவண்ணாமலை கோபுரத்தில் கொலுவிருக்கும் கணபதியைக் குறித்துச் சொல்லப்படும் பாடல் இது.<br />நம் பிறவித் துன்பம் முதலான துன்பங்களும் துயரங்களும் கவலைகளும் வேதனைகளும் விலகும். இந்தப் பாடலை பாடி விநாயகச் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள். விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.